Friday, November 7, 2014

பதவிக்காக - சுஜாதா


குங்குமத்தில் தொடராக இந்த நாவல் வெளிவந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஆகிறது, இருந்தாலும் இன்றைய காலக்கட்டத்திற்கும் கச்சிதமாக பொருந்திப் போவது தான் ஆச்சர்யம். நாவலின் மையக்கரு போல்,  தமிழக அரசியலும், அதன் காட்சிகளும் இன்றளவும் தொடர்வது கொடுமையிலும் கொடுமை. இன்னும் முப்பது வருடங்கள் கழித்து பார்த்தாலும் காட்சி மாறாமல் அப்படியே இருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. 

சுஜாதா அவர்கள் எந்த அரசியல்வாதியையும் பார்த்து எழுதி இருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறேன், ஒரு கணிப்பில் எழுதியிருக்க வேண்டும், அவரது கணிப்பை பொய்த்துப் போகாமல் போற்றிப் பாதுகாத்து வரும் அரசியல் வாதிகளையும், அவர்களை தாங்கிப் பிடித்து வரும் மக்களையும் கண்டு மனம் கொதிக்கத்தான் செய்கிறது. சரி விடுங்கள் இதற்கு மேல் இன்னும் உள்ளே சென்றால் பல சங்கடங்களை சொல்ல வேண்டி வருமென்பதால் இத்தோடு இதற்கு (.)


கதைச்சுருக்கம்:

அரசியல்வாதி சின்னப்பனை எதிர்த்து இடைத்தேர்தல் ஒன்றில் சுயேச்சையாக நின்று வெற்றிப்பெற்று சட்டமன்ற உறுப்பினராகிறார் தன்ராஜ். அதற்கு அணிலாக உதவி புரிகிறான் உதவியாளர் நாகு.

சுயேச்சையாக ஜெயித்த உறுப்பினரை தத்தமது பக்கமிழுக்க முதல்வர் தரப்பும், அதிருப்தி தரப்பும் போட்டி போடுகின்றன. முதல்வர் ஆறுமுகத்தை எதிர்த்துக் கொண்டு அதிருப்தி தரப்பான அரங்கனார் பக்கம் சென்று ஆட்சியை கலைக்க டெல்லி வரை சென்று உதவுகிறார் தன்ராஜ். படித்தவன், அதுவும் சாதூர்யமான பேச்சிருப்பதால் அரங்கரா இவனை விடாமல் இழுத்துக்கொண்டு செல்கிறார்.   

இன்னொருபக்கம் ஜமுனா, அவளுடைய கணவன் கோவிந்தராவ் பற்றி செல்கிறது கதை . ஜமுனா விற்கும் , தன்ராஜ்க்கும் இடையே இருக்கும் காதல் என்கிற காம விளையாட்டை நெருடலின்றி எழுதி இருக்கிறார். கோவிந்தராவ் போன்றதொரு அப்பாவியை எங்கேயும் பார்த்திராத அளவிற்கு புனைந்திருப்பது அவ்வளவு சுவாரசியம். 

இன்னொன்று கவர்னர் வர்மா பற்றி சுருக்கமாக சொன்னதே தலை சுற்றவைக்கிறது. குழப்படி வேலை செய்வதும் அதை பாதுகாக்க கோர்த்து விடுவதுமாக கவர்னரின் வேலையை கச்சிதமாக சொல்லியிருப்பது சிறப்பு. 

ஆட்சியை கவிழ்ப்பதற்கு என்னன்ன வேலைகளை செய்ய முடியுமோ அம்புட்டு வேலைகளையும் செய்வது அட்டகாசம். முதல்வருக்கும், முதல்வராக ஆசைப்படும் அதே கட்சியின் சீனியருக்கும் இடையே நடைபெறும் மோதல்களும் தில்லாலங்கடி வேலைகளையும் எழுத்தில் வெகு சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். 

தன்ராஜ் தெரிந்தே ஜமுனாவின் வாழ்க்கையை சீரழிப்பதும், அதை தெரிந்துகொண்ட தன்ராஜின் மனைவி திலகவதி பேசும் பேச்சுக்கள் இயல்பு. ஜமுனாவின் வயிற்றில் தன்னோட கருதான் வளர்கிறது என்று அதை உரிமை கொண்டாடும் தன்ராஜ் பண்ணும் வேலைகள் கொஞ்சம் ஜாஸ்தியாக இருந்தாலும் உறுத்தவில்லை. 

அரங்கராவின் லீலையை கேசட் பண்ணும் சேட்டைகளிருக்கே செம செம ... படிச்சி பாருங்கள் உங்களுக்கே புரியும்...

தன்ராஜை தேடி முதல்வர் பதவியே வரும் அளவிற்கு குறுகிய காலத்திற்கு வளர்வது தான் உச்சம். முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டானா ? ஜமுனாவும் அவளது குழந்தையும் என்ன ஆனது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

ப்ளஸ்:

ஜமுனாவிற்கும், தன்ராஜ் க்கும் இடையே இளம்வயதில் நடந்த காதல் முறிவை சொல்லாமல் இடையிடையே கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லியிருப்பது நச்...

திலகவதிக்கும், தன்ராஜ்க்கும் தாலி கட்டாமல் இணைந்து வாழும் இல்லறத்தை போகிற போக்கில் சொல்லிச்சென்றது கூடுதல் அழகு ...


========================================================================

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்

மொத்த பக்கங்கள் : 384

விலை : 230/-

========================================================================

படித்துச் சொன்னது

அரசன்
http://www.karaiseraaalai.com/ 


7 comments:

  1. //தாலி கட்டாமல் இணைந்து வாழும் இல்லறத்தை போகிற போக்கில் சொல்லிச்சென்றது கூடுதல் அழகு ...//

    முப்பது வருஷத்துக்கு முன்னாடியே லிவ்விங் டுகெதர் பத்தி எழுதியிருக்காரா தலைவர்.. ஆசம்.. ஆசம்..!

    ReplyDelete
  2. அட்டகாசமான விமர்சனம், இன்னும் படிக்காத புத்தகம்... படிக்க வேண்டும்

    ReplyDelete
  3. சிறப்பான விமர்சனம்!
    இதுவரை இ(ந்தக் க)தை படித்ததில்லை.
    படிக்க வேண்டும்!

    ReplyDelete
  4. சிறப்பான விமர்சனம்!
    இதுவரை இ(ந்தக் க)தை படித்ததில்லை.
    படிக்க வேண்டும்!

    ReplyDelete
  5. 'சமூக நாவல்' என்பதோடு
    'அரசியல்' என்பதையும் இணைத்துக் கொள்ளலாமே?

    ReplyDelete
  6. அட! சுஜாதா பல விஷயங்களில் தீர்க்கதரசி என்று சொல்லப்படுவதுண்டு! திருமணம் செய்யாமல் இணந்து வாழ்தல் பற்றி அப்போதே சொல்லியிருப்பது மிகவு ஆச்சரியமாக இருக்கின்றது. இந்தப் புத்தகம் வாசித்ததில்லை. வாசித்துவிட வேண்டும். நன்றி அரசன்!

    ReplyDelete
  7. தமிழக அரசியலும், அதன் காட்சிகளும் இன்றளவும் தொடர்வது கொடுமையிலும் கொடுமை. ... வாரிசு அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!