Monday, February 17, 2014

ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகனுக்கு ஒரு வாசகனின் கடிதம்

அன்புள்ள விநாயக முருகன்,

நான் நலம், நீங்கள் நலமா? தங்களுடைய முதல் புத்தகமான ராஜீவ்காந்தி சாலையை வாசித்துவிட்டேன், வாசிப்பதற்கு முன்னும் பின்னும் என்னுள் ஏற்பட்ட உணர்வுகளை விமர்சனமாக எழுதுவதைவிட இக்கடிதம் மூலம் எழுதுவது நலமென நினைக்கிறன். உங்களுடைய முதல் புத்தகத்திற்கு முதலில் எனது வாழ்த்துக்கள். 

இந்தாண்டு புத்தகச் சந்தைக்கு முன் பரபரப்பாக நடைபெற்ற புத்தகச் சண்டையில் உங்கள் புத்தகமும் ஒன்றென்று அறிவேன். புத்தகம் வெளிவருவதற்கு முன்பே ஒரு இளம் மற்றும் முதல் எழுத்தாளருக்கு கிடைக்க வேண்டியதை விட மிக அதிகமான எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்துவிட்டீர்கள். ஒருவேளை அப்படியொரு சம்பவம் இணையத்தில் நடைபெறாது போயிருந்ததால் எனக்கும் கூட தங்களது புத்தகம் பற்றிய தகவல் கிடைக்கமால் போயிருக்கலாம். 



எது எப்படியோ, இந்த வருட புத்தக கண்காட்சியினுள் நுழையும் போதே, எந்த புத்தகம் வாங்குகிறோமோ இல்லையோ ராஜீவ் காந்தி சாலை வாங்கியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் நுழைந்தேன். வாங்க நினைத்ததன் முதல் காரணம் அது என் தொழில் சார்ந்த சூழலைப் பற்றிய புத்தகம், இரண்டாவது கடந்த இரு வருடங்களாக என்னை பயணிக்க வைத்துக் கொண்டிருக்கும் சாலை. மூன்றாவது - படிக்க இரண்டாவது பத்தி. வாங்கலாமென்று ஆவலோடு கையிலெடுத்த புத்தகத்தை, எடுத்த வேகத்தில் கீழே வைத்துவிட்டேன், காரணம் விலை. இருநூற்று நாற்பது ருபாய். பதிப்பகம் உயிர்மை. இருக்காதா பின்னே! என் அண்ணனைப் பார்த்தேன் 'புது ரைட்டர், இவ்ளோ ரேட்டு, யோசிச்சிக்கோ?' என்றான். (அவன் சாருவின் வாசகன் என்பது இங்கு தேவையில்லாத விசயமாக இருந்துவிட்டுப் போகட்டும்.)          

வாங்கவில்லை. இருந்தும் மனம் முழுவதும் ராஜீவ் காந்தி சாலையின் மீதே இருந்தது. இந்த நல்ல நேரத்தில் ஸ்கூல்பையன் வாங்கிய புத்தகங்களைக் கவனித்தேன். அட அவர் கைகளில் நீங்கள் எழுதிய ராஜீவ் காந்தி சாலை. அடுத்த சில நிமிடங்களில் என் கைகளுக்கு மாறியிருந்தது.   

*****

சுஜாதாவின் கணேஷ் வசந்த் புத்தகங்களை ஆரம்பிக்கும் போது எதிர்பாராத ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளுமே அப்படியொரு மனநிலையில்தான் நானும் ராஜீவ்காந்தி சாலையின் முதல் பக்கத்தை வாசிக்கத் தொடங்கினேன். போதாக்குறைக்கு மனுஷ் வேறு மிகவும் விறுவிறுப்பாக செல்லும் நாவல் என்றும், அடுத்த சுஜாதா, பாலகுமாரன் வரிசையில் விநாயக முருகன்தான் என்று அபிலாஷும் பேஸ்புக்கில் எழுதியிருந்தார்கள். என் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. மனதிற்குள் நூறுமுறை ஸ்கூல்பையனுக்கான நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.

முதல் சில பக்கங்கள் 'காலம்' பேசுகிறேன் என்று காலமானது பழைய மகாபலிபுரம் சாலையான தற்போதைய ராஜீவ்காந்தி சாலையின் ஆதிநிலையில் இருந்து தன்னுடைய விவரிப்பைத் தொடங்குகிறது. அட இது நாம எதிர்பார்த்தத விட நல்லா இருக்கும் போலயே, இதப் போய் ஏன் சாரு திட்டினாரு என்றெண்ணியபடி தொடர்ந்தேன். வழக்கமாய் நான் பயணிக்கும் சாலையின் மழைநீர் வழிந்தோடும் காலத்தில் இருந்து கதை தொடங்கியது. சொன்னால் நம்பமாட்டீர்கள் ஒரே மூச்சில் படித்து முடிப்பதற்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டேன்.   

ஆனால்...! தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. அடுத்தடுத்த பக்கங்களில் நான் எதிர்பார்த்த ஏதோ ஒன்று குறைவது போலவே தோன்றியது. அது சுவாரசியமா இல்லை கதைசொல்லிய விதமா எனத் தெரியவில்லை. சரி போகப்போக சுவாரசியம் அதிகரிக்கும் தொடர்ந்து வாசிக்கலாம் என்று நினைத்த எனக்கோ மிதமிஞ்சிய ஏமாற்றம். போதாக்குறைக்கு கதைமாந்தர்கள்  பார்வையில் பார்ப்பனர்கள் மற்றும் மலையாளிகள் அனைவருமே மோசமானவர்கள் அல்லது மிக மோசமானவர்கள். அதிலும் பார்ப்பனர்களை உவமைபடுத்தியிருக்கும் விதம் வன்மத்தின் உச்சம் (உடனே நான் பாப்பானா என்ற ஐயம் வேண்டாம்). சரி அது உங்கள் எழுத்துச் சுதந்திரமாக இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கு தேவையில்லாத விஷயம். 

அதன்பின் சில நாட்களுக்கு புத்தகத்தைத் தொடவேயில்லை. இருந்தும் தட்டிக்கழிக்கவும் முடியவில்லை. ஒருவழியாக வாசித்து முடித்துவிட்டேன்.

*****

பிரதானமான ராஜீவ்காந்தி சாலை, அங்கே பிரதானமாக இருக்கும் சில்வர்சாப்ட் உட்பட பல ஐ.டி கம்பெனிகள். இந்த கம்பெனிகளில் வேலை பார்க்கும், ஓய்வெடுக்கக் கூட நேரமின்றி நவீன கலாச்சாரத்திற்கு தங்களை மிக வேகமாக மாற்றிக் கொண்ட புதியதலைமுறை ஒருபக்கமும், அதே ராஜீவ்காந்தி சாலையில் தங்களிடமிருந்த இருந்த நிலங்கள் மொத்தத்தையும் அரசாங்கத்திடமும், ரியல்எஸ்டேட் பண முதலைகளிடமும் ஏமாந்த மனிதர்கள் மற்றும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள் என்று தற்கால வாழ்க்கைச் சூழலின் வேகத்திற்கு தங்களை மாற்றிக்கொள்ள முடியாமல் திண்டாடும் எளிய மக்கள் மறுபுறமும் என அற்புதமாக பின்னப்பட்ட கதை. 

ஆனால் பிரதானமாக இருந்திருக்க வேண்டிய ராஜீவ்காந்தி சாலையானது கதை விவரிக்கப்பட்ட பாணியில், ஓய்வின்றி பணம் பணம் பணம் என்று ஓடும் இளைஞர்களின் மனைவிகள் அனைவருமே கள்ளத்தொடர்பு வைத்துக் கொள்வார்கள் என நகர்ந்து கள்ளத்தொடர்பு என்பது மட்டுமே பிரதானமாகிவிட்டது போல் தோன்றுகிறது. கதை முழுவதுமே யாராவது யாருடனாவது கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்கிறார்கள். கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்ட பாவத்திற்காக இழுத்துக் கொண்டு ஓடுகிறார்கள் இல்லையேல் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது தற்கொலை செய்ய தூண்டப்படுகிறார்கள். ஒருவேளை ஐ.டி துறையில் வேலை செய்யும் இளைஞர்கள் தாம்பத்ய விசயத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்ற விஷயத்தை பொட்டில் அறைந்தார் போல் கூறும் நாவல் என இதனை வைத்துக் கொள்ளலாமா?    

கதையின் முதல் எழுபது பக்கத்திற்கு மிகவும் சோகையாக நகரும் ராஜீவ்காந்தி சாலையை அதன் பின் 'சூடு'பிடித்து நகரச் செய்வது இந்த கள்ளகாதல் வகையறாக்கள்தான். எப்போதுமே அடுத்தவர்கள் அந்தரங்கத்தை அறிந்துகொள்வதில் இருக்கும் தக்குனூண்டு ஆர்வம் யாருக்குமே தவிர்க்க முடியாத ஒன்று. அது நிஜமாய் இருந்தால் என்ன புனைவாய் இருந்தால் என்ன? நான் நினைக்கிறன் உங்கள்  நாவலை நகர்த்திச் செல்வதும் அந்த ஒரு காரணி கள்ளக்காதல் + காமம் + ஆபாசம் தான் என்று. அதனால் தானோ என்னவோ இந்த புத்தகத்தை யாருக்கேனும் சிபாரிசு செய்யவும் பயமாய் இருக்கிறது. யாருமே இதுபோன்ற புத்தகங்களை வெறுப்பதில்லை என்றாலும் விரும்புவதுமில்லை. 

காமத்தை வர்ணிக்கும் சில விசயங்களை இலைமறை காய்மறைவாக நகர்த்தியிருக்கலாம். அதிகபட்ச ஆபாசச் சொற்களையாவது குறைந்தபட்சம் ஆக்கியிருக்கலாம், நீங்கள் சாருவின் சாயலில் எழுதியிருப்பதாக நீங்கள் குறிப்பிட்டதாக சாரு குறிப்பிட்டிருந்தார். எனக்கு ஏனோ இதுபோன்ற எழுத்துக்களில் உடன்பாடில்லை (எனக்கு மட்டுமே). கதையோட்டம் கருதி சில ஆபாச (அ) காம வார்த்தைகளை, சம்பவங்களைச் சேர்க்கலாம். ஆனால் இவை மட்டுமே கதையோட்டமாக இருக்கும் என்றால் இதற்கும் சரோஜாதேவி புத்தகத்திற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? நாசூக்காக சொல்ல வேண்டிய பல விஷயங்கள் நாராசமாய்ப்பட்டது. ஏன் கெட்ட வார்த்தைகள், நேரடியான ஆபாச சித்தரிப்புகள்? பெண்ணின் சுயஇன்பம் அனுபவித்தலை, லெஸ்பியன் செக்ஸை, அடையாறு நாய் டாக்டர் போன்ற விசயங்களை வலிந்து திணித்திருப்பது போல் பட்டது. அவற்றை ஒற்றை வரியில் விளக்கிவிட்டு கதைக்குள் நகர்ந்திருக்கலாமே. சொல்லபோனால் அந்த அடையாறு நாய் டாக்டர் கதையின் ஓட்டத்தில் எங்குமே சம்மந்தப்படவில்லை. பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை அதனை ஒரு செய்தியாக தர முயன்றிருக்கிறீர்களா? இப்படி பல தேவையில்லாத விசயங்களை கத்தரிப்பதன் மூலம் புத்தகத்தின் பல பக்கங்களைக் கணிசமாகக் குறைத்திருக்கலாமே?             

எனக்கு மற்றொரு விஷயம் புரியவேயில்லை, அதவாது கதை நடக்கும் காலம். காலம் என்று கதை முழுவதும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கார்காலம், கூதிர்காலம், இளவேனிற்காலம் முதலியவற்றைக் கூறவில்லை. எந்த வருடத்தில் நடக்கின்றது என்பதை கேட்கின்றேன். ஏனென்றால் இந்த நாவலில் மிக சமீபத்தில் EA வில்  நடந்த தற்கொலை பற்றி குறிப்பிட்டுள்ள அதே நேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் புத்தாண்டு கொண்டாடத்தின் போது ஏற்பட்ட நீச்சல்குள விபத்து பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். கதையின் பல இடங்களில் ராஜீவ் காந்தி சாலையின் சாலை கட்டமைப்புப் பணிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிடுகிறீர்கள். அதுவும் புரியவில்லை. 

கடந்த சில வருடங்களாக சிறுசேரி வரையிலும் முழுமையடைந்த ராஜீவ்காந்தி சாலையில்தான் நான் பயணித்துக் கொண்டுள்ளதாக நம்புகிறேன்! ஒரு இடத்தில் கூட சாலை கட்டுமானப்பணிகளை பார்த்ததில்லை. ஆகையால் கதை நடக்கும் காலத்துடன் எதையுமே பொருத்திப் பார்க்க முடியவில்லை. இரா.முருகனின் மூன்று விரல் நாவல் படிக்கும் போதும் காலம் விசயத்தில் இதே போன்றதொரு குழப்பம் ஏற்பட்டது, ஆனால் அந்நாவலில் கதை நடைபெறும் வருடம் எப்போது என்பதுதான்  ட்விஸ்டே. ஒருவேளை அப்படியெதுவும் இதில் இருக்குமோ என்று எதிர்பார்த்தேன், அப்படியும் இல்லை. சரி புனைவு என்பதால் காலம் தேவையில்லை என்று நினைத்துவிட்டீர்களோ? 

உங்கள் நண்பர் ஒருவரின் விமர்சனத்தை பேஸ்புக்கில் படித்தேன். அதாவது உங்கள் பேஸ்புக் ஸ்டேடசில் வழிந்தோடும் எள்ளல் நடை இப்புத்தகத்தில் இல்லை, மற்றபடி அருமையாக நகரும் நாவல் என்று. இப்படி யாரேனும் உங்கள் நாவலை விமர்சனம் செய்தால் கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள், காரணம் உங்கள் வீழ்ச்சிக்கான படுகுழியை அவர்களே வெட்டலாம். 

முந்நூறு பக்கங்களுக்கு மிகாமல் ஒரு நாவல் எழுதுகிறீர்கள், அதுவும் உங்கள் முதல் நாவல், அதனை பார்த்துப் பார்த்து செதுக்க வேண்டாமா? கொஞ்சம் அலங்காரமான நடையுடன் எழுதியிருக்க வேண்டாமா? அலங்காரம் கூடத் தேவையில்லை. பிழைகளைத் தவிர்த்திருக்கலாமே? ஏன் உங்கள் கதாபாத்திரங்கள் அனைவரும் வரிக்கு வரி எதையாவது நினைத்துப் பார்க்கிறார்கள்? அவர்கள் நினைப்பவை எல்லாவற்றையும் வரிக்குவரி நினைக்காமல் பாராபாராவாக நினைத்துப் பார்க்கச்சொன்னால் உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும்.      

உங்கள் நாவலை எழுதிவிட்டு நிதானமாகய் ஒருமுறை படித்து பார்த்தீர்களா? இல்லை நீங்கள் எழுதிய நாவலை நிதனாமகப் படித்துப் பார்க்கும் அளவுக்கு உங்களுக்குகே பொறுமை இல்லையா? கதாபாத்திரங்கள் பேசிக்கொள்ளும் போது ஏன் இவ்வளவு குளறுபடிகள். பழனி பேச வேண்டியதை லூர்து பேசுகின்றான். லூர்து பேச வேண்டியதை பழனி பேசுகிறான். ஒரு இடத்தில் சம்மந்தமே இல்லாமல் கார்த்திக் பேச வேண்டியதை பிரணவ் பேசுகிறான். இதையெல்லாம் விட கொடுமை என்னவெனில், கடைசி அத்தியாத்திற்கு முந்தைய அத்தியாத்தில் இறந்து போன ஒரு கதாபாத்திரம், கடைசி அத்தியாயத்தில் அமைதியாக லேப்டாப்பை திறந்து பார்ப்பதுதான். ஒருவேளை ராஜீவ்காந்தி சாலையில் அலைந்து திரியும் பேய்களையும் நீங்கள் விட்டுவைக்கவில்லையோ!    

புத்தகக் கண்காட்சிக்குள் முடித்தே ஆக வேண்டும் என்ற டார்கெட் வைத்து எழுதினீர்களா? அப்படி என்றால் உயிர்மை கூடவா பிழை திருத்தவில்லை. 

மொத்த கதையும் ஏன் இவ்வளவு அழுத்தத்துடன் நகர்கிறது . படிக்கும் பொழுது ஏதோ ஒரு பெரிய பாராங்கல்லை சுமந்துகொண்டே படிப்பது போன்ற உணர்வு. அத்தனை பேரும் எத்தனை பெரிய துன்பம் வரினும் ஆங்காங்கு சிரிக்கக் கூடவா மாட்டார்கள்?    

இவ்வளவு பெரிய நாவலில் ஒருவரி கூடவா உனக்குப் பிடிக்கவில்லை என்று கேட்கலாம்.  குப்பைமேட்டில் நின்று கொண்டு உயர்ந்து வளர்ந்த கட்டிடங்களை நோக்கி லூர்து சிந்தித்துப் பார்ப்பானே 'புள்ளியில் இருந்து பிரம்மாண்டத்தைப் பார்த்தால் அதிசியமாய் இருக்கும் பிரம்மாண்டத்தில் இருந்து புள்ளியைப் பார்த்தால் என்ன அதிசியம் இருக்கப்போகிறது' என்றவரியை மெய்யாலுமே ரசித்தேன். மற்றும் இந்த புத்தகத்தில் எனக்கு தெரியாத மற்றும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றது. என்னவொன்று அதைத் தெரிந்து கொள்வதற்காக என் பொறுமையை சோதிக்க வேண்டியதாய் இருக்கிறது.      

'அதான் புடிக்கலை இல்ல அப்போ எதுக்கு இவ்வளோ பெரிய கடுதாசி எழுதிட்டு இருக்க' என்று நீங்கள் கேட்கலாம். முன்னூற்றி சொச்சம் பக்கங்கள் பாஸு. எனக்குக் கிடைத்த பொன்னான நேரத்தை செலவழித்துப் படித்துள்ளேன், இந்த புத்தகம் படித்த நேரத்தில் வேறுசில புத்தகங்களைப் படித்திருக்கலாம். அந்த ஆதங்கம் தான் வேறு ஒன்றுமில்லை. 'புடிக்காட்டா படிக்காதே' என்று கூறிவிடாதீர்கள். என்னை போன்ற வாசகனுக்காக எழுதாமல் வேறு யாருக்காக மாய்ந்து மாய்ந்து புத்தகம் எழுதுகிறீர்கள். மற்றொன்றும் கேள்விபட்டேன் ஆயிரம் பக்கத்திற்கு மிகாமல் மற்றொரு நாவல் எழுதப் போகிறீர்களாமே, ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ராஜீவ்காந்தி சாலையை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு எழுதத் தொடங்குங்கள். 

காரணம் ஒரு புத்தகம் எப்படியெல்லாம் எழுதப்படக்கூடாது என்பதற்கான மிகச்சிறந்த படிப்பினை ராஜீவ்காந்தி சாலை என்பதைத் தவிர வேறு எந்த தாக்கத்தையும் என்னுள் ஏற்படுத்தவில்லை. ஒருவேளை சிபாரிசு செய்வதென்றால் தங்களுடைய முதல் புத்தகத்தை எழுத இருக்கும் அத்தனை நபர்களுக்கும் இந்த புத்தகத்தினை சிபாரிசுசெய்கிறேன். ஒரு கதை எப்படி இருக்கக்கூடாது என்பதற்காக. இந்தப் புத்தகத்தின் குறைகளை ஏதேனும் காபி ஷாப்பில் அமர்ந்து நிதானமாக விவாதிக்கலாம் என்றாரே சாரு, நீங்கள் சம்மதித்தால் ஏதேனும் ரோட்டோர டீக்கடையில் வைத்து விவாதிக்கக்கூட நான் தயார். அடுத்த பதிப்பிலாவது குறைகளைக் களைந்து வெளியிட வேண்டும் என்பதற்காகத்தான். காரணம் இது மிகச் சிறப்பாக வந்திருக்க வேண்டிய புத்தகம். 

இப்படிக்கு 
ராஜீவ்காந்தி சாலையில் உங்களோடு பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு சக பயணி
சீனு  

49 comments:

  1. மூணு இன்லேன்ட் லெட்டர் புடிக்கும் போலிருக்கே!! ;-)

    எழுத்தாளர் அடுத்த படைப்பில் இவற்றை திருத்தி நல்ல படைப்பை கொடுப்பார் என்று நம்புவோமாக!!

    ReplyDelete
    Replies
    1. மூணுதான் புடிக்குமா ஆவி பாஸ் :-)))

      Delete
  2. // இந்த நல்ல நேரத்தில் ஸ்கூல்பையன் வாங்கிய புத்தகங்களைக் கவனித்தேன். அட அவர் கைகளில் நீங்கள் எழுதிய ராஜீவ் காந்தி சாலை. அடுத்த சில நிமிடங்களில் என் கைகளுக்கு மாறியிருந்தது. //

    அட்ரா அட்ரா அட்ரா !

    // பழனி பேச வேண்டியதை லூர்து பேசுகின்றான். லூர்து பேச வேண்டியதை பழனி பேசுகிறான். ஒரு இடத்தில் சம்மந்தமே இல்லாமல் கார்த்திக் பேச வேண்டியதை பிரணவ் பேசுகிறான். //

    பொஸ்தகத்துலயும் லாஜிக் மிஸ்டேக் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களா ?

    இதுபோன்ற புஸ்தகங்களை வாங்கி பணத்தை வீணடிக்காமல் இருக்க நாம் ஒன்று செய்யலாம். ஒன்றிரண்டு பிரதிகளை வாங்கி வைத்து நமக்குள் மாற்றி படித்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஸ்பை கிட்டதான் இருக்கு பிரபா.. தற்சமயம் அவர் வாசித்துக் கொண்டிருப்பார் என் நம்புகிறேன்.. உங்கள் க்யுவை காலி செய்யுங்கள்... அதற்குள் ஸ்பையும் முடித்துவிடுவார்.. மீண்டும் சந்திக்கும் பொழுது அவரிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம்

      Delete
  3. வணக்கம்
    புதிய புத்தகம் பற்றிய அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் வாங்கி படிக்கச்சொல்லுகிறது...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

      Delete
    2. அவரு கிண்டல் பண்றாருங்க.

      Delete
  4. சீனு... மனதில் பட்டதை அப்படியே சொல்லி விட்டீர்கள். இல்லை, இல்லை, எழுதி விட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் சார்...

      Delete
  5. சரிதான்... ‘இந்த’ மாதிரி விஷயங்களை எழுதுவதறகு நாம்தானே அதாரிட்டி, இவன் யார் போட்டியாக... என்ற எண்ணத்தில்கூட சாரு கோபித்துக் கொண்டிருக்கலாம் & என்றுதான் மனதில் நினைத்திருந்தேன். இப்படி கேரக்டர்களின் ஸ்டேட்மெண்ட்டை மாற்றிப் போடுவதும், நாயுடன் ஒரு பெண்... சொல்லவே கூசுகிறது.... மொத்தத்தில் பொறுமையாகப் படித்த மிஸ்டர் சீனுவுக்கு தாங்க்ஸ் & எங்களைக் காப்பாத்தினதுக்காக!

    ReplyDelete
    Replies
    1. நானும் முதலில் தனக்கு போட்டி என்று நினைத்துவிட்டாரோ என்றுதான் நினைத்தேன்.. படித்ததும் உண்மை புரிந்துவிட்டது..

      நோ நோ நோ நீங்க அப்படியெல்லாம் சொல்லி தப்பிக்கப்பிடாது.. படிச்சே ஆகணும் :-)

      Delete
  6. ஓசியாக கொடுத்தாலும் இந்தக் கண்றாவியை படிப்பதாக இல்லை... 250 + நேரமும் தண்டம்...

    "போனால் போகட்டும்" எனும் ஸ்கூல்பையருக்கு நன்றிகள்... ஹிஹி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா இப்படி ஒரு கமெண்ட் போட்டு ஒரு புரட்சியே உண்டு பண்ணிவிட்டீர்களே டிடி

      Delete
    2. காசு கொடுத்து படிக்கச் சொன்னா?

      Delete
  7. //நீங்கள் சம்மதித்தால் ஏதேனும் ரோட்டோர டீக்கடையில் வைத்து விவாதிக்கக்கூட நான் தயார்.//

    பில்லு யாரு கட்டுறது?

    ReplyDelete
    Replies
    1. வாங்கனன்னா வணக்கங்கண்ணா...

      நமக்கு ஸ்பான்சர் எப்போதுமே ஆவி பாஸ் தான்

      Delete
    2. இப்படியே போச்சுன்னா ஆவி பாஸ் இல்லே பெயில் ஆயிடும்.. :)

      Delete
  8. /இப்படிக்கு,

    ராஜீவ்காந்தி சாலையில் உங்களோடு பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு சக பயணி

    சீனு/

    பார்ரா!!!

    ReplyDelete
    Replies


    1. இப்படிக்கு
      அண்ணன் மெட்ராசின் விழுதுகள்ன்னு போட்டிருந்தா சரியா இருக்கும் இல்ல :-)

      Delete
  9. மிக்க நன்றி! சீனு! வாங்குவதாக இருந்தோம்! DD சொல்லியுள்ளது போல் ஓசியில் கிடைத்தாலும் ..வாசிக்கும் ஆர்வம் போய்விட்டது!

    சத்தியமாக உங்களுக்கு hats off! இதைப் படித்து விமர்சித்ததற்கு!

    பகிர்தலுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தவிர்க்கக் கூடாத நாவல் தவிர்க்க வேண்டியதாகிவிட்டது என்ன செய்வது.. பிழைகளையும் வாக்கிய அமைப்புகளையும் சரி செய்து கொஞ்சம் கத்தரிப்புகளையும் செய்து அடுத்த பதிப்பில் வெளியிடலாம்

      Delete
  10. மிக அழுத்தமாக, தெளிவாக உங்கள் கருத்துக்களை ஆசிரியருக்கே நேரடியாகக் கடிதம் எழுதி சொல்லியிருக்கிறீர்கள் சீனு. என்னைபோன்ற பல பேர்களை இந்தப் புத்தகம் வாங்காமலும், ஓசியில் கிடைத்தாலும் படிக்காமல் இருக்கும்படி செய்திருக்கிறீர்கள். நன்றி.

    உங்கள் எழுத்துக்கள் மெருகேறி வருகின்றன. சுற்றி வளைக்காமல் நினைத்ததை சொல்லுவதும், பாரா பாராவாகப் பிரித்து எழுதுவதும் படிப்பவர்களுக்கு படிப்பதை எளிமைப் படுத்துகின்றன.

    வாசகர் கூடத்தில் புத்தக விமரிசனம் மட்டுமே எழுதுவது மிக நல்ல முயற்சி. எனது சிறு வேண்டுகோள்: அதிகம் வெளியில் தெரியாத புத்தகங்களை பற்றி எழுதுங்கள். சுஜாதாவின் புத்தகங்களை இங்கு விமரிசனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டாம். அவரது புத்தகங்களை இந்தத் தலைமுறையினரும், வரும் தலைமுறையினரும் நிச்சயம் படித்துவிடுவார்கள்.

    இன்னொரு விஷயம் உங்கள் தளத்தில் நானும் எழுதலாமா? நீங்கள் சொல்லும் வரைமுறைக்கு உட்பட்டே எழுதுவேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரஞ்சனி அம்மா...

      வாத்தியாரின் பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன்.. விதிமுறைகள் என்று பெரிதாக எதுவும் இல்லை.. உங்கள் விமர்சனத்தை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள் போதும் அம்மா .. விரைவில் உங்களிடம் இருந்து எதிர்பாக்கிறேன்

      Delete
  11. ஒரு தெளிந்த வாசகனுக்குண்டான தெளிவு உங்கள் எழுதில் தெரிகிறது. காசு கொடுத்து வாங்கும் வாசகனை ஒரு புத்தகம் ஏமாற்றினால் அந்த எழுத்தும் பிழைதான்.

    ReplyDelete
    Replies
    1. அந்த ஒரு ஆதங்கம் தான் சார்.. மிக்க நன்றி உங்கள் கருத்துக்களுக்கு

      Delete
  12. Amanga nanum last week than padichan.. Cinemaku A certificate kudukara matiri ini books melaum A Pottu round podanum pola.. Ivara vida UPPU NAAIKAL novel la laksmi saravanakumar innam payangara pachai pachaya eludirukar.. Mudila..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பிரகாஷ்.. உப்பு நாய்கள் வாங்கலாம் என்று இருக்கிறேன்.. பலரும் நன்றாக உள்ளது என குறிப்பிட்டு இருந்தார்களே...

      Delete
  13. மிக நல்ல விமர்சனம்! அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் புத்தகத்தில் என்று வாங்கலாம் என்று முடிவெடுத்திருந்தேன். இப்போது கள்ளக்காதல் விவகாரம் என்றால் 'தினத்தந்தியே' போதும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பொசுக்குன்னு தினத்தந்தி வரைக்கும் போயிட்டீங்களே சார் :-)))

      Delete
  14. விமர்சன காலையில் தேர்ந்து விட்டாய் சீனு.வாழ்த்துக்கள் .
    சாட்டையடி வினாயக முருகனுக்கு. கதைக்குதேவையோ இல்லையோ உள்ளுக்குள் தோன்றும் அந்தரங்க, ஆபாச எண்ணங்களை எழுத்தில் பதிவு செய்வது அங்கீகரிக்கப் படுகிறது என்ற எண்ணத்தை சாருவின் எழுத்துக்கள் தோற்றுவித்துள்ளது.
    சுஜாதா புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார் போன்றவர்களின் கதைகளில் ஆங்காங்கே சில கிளுகிளுப்பு வார்த்தைகள் காணப்படுவதுண்டு. எல்லா துறைகளுக்கும் இன்னொரு முகம் உண்டு ,மோசமான முகத்தை மிகை படுத்தி பதிவுசெய்தளை தவிர்ப்பது நல்லது.
    பார்ப்பனர்கள் மிக மோசமானவர்கள் என்ற எண்ணம் இணையம் முழுதும் விரவிக் கிடக்கிறது.இது நூல்களிலும் பிரதிபலிக்கிறது.ஓரு இனத்தின் மீதான வெறுப்பை திணிப்பது எந்த அளவுக்கு சரியானது என்பது விவாதத்திற்குரியது.
    விமர்சனத்தை வைத்து பார்க்கும்போது சீரியல்கள் நினைவுக்கு வருகின்றன.
    நேர்மையான விமர்சனம்

    அடுத்து அராத்து வின் புத்தக விமரசனத்தை எதிர்பார்க்கலாமா? .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி முரளி சார்... அராத்து எழுதியது எதோ பின்நவீனத்துவமாம்... அதை நான் படித்து புரிந்துகொள்ள எனக்கு பக்குவம் போதாது.. யாராவது வகுப்பெடுத்தால் வசதியாய் இருக்கும் :-)))))))

      Delete
  15. கே.பாக்யராஜ் மாதிரி டீல் பண்ண வேண்டிய விஷயத்தை எஸ்.ஜே.சூர்யா மாதிரி டீல் பண்றது தான் நவீன இலக்கியம்ன்னு நினைக்கிறவங்களுக்கு, சாட்டையடி.

    ReplyDelete
  16. எபப்டியாவது வாங்கி படிக்கணும்னு நெனச்சேன்......முடிஞ்சிது .

    ReplyDelete
  17. சீனு உங்க புத்தகம் எப்ப வெளிவரப்போகுது?

    ReplyDelete
  18. புத்தக கண்காட்சிக்கு போகறதுக்கு முன்னாடியே இதை பத்தி யாரோ பதிவு எழுதி இருந்தாங்க! உயிர்மை உள்ள நுழைஞ்சு பார்த்தா எல்லாம் விலை நாம் வாங்கற சக்திக்கு இல்லை! விட்டா போதும்னு ஓடி வந்துட்டேன்! நல்ல சாட்டையடி விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
  19. உங்கள் எழுத்தின் உயரம் இமயமா? பக்குவமிக்க எழுத்து. பாராட்டுக்கள்! (2) புதிதாக எழுதுபவர்கள், அதிலும் கணினித் துறையில் பணிபுரிபவர்கள், இப்போதெல்லாம் செக்சை மட்டுமே முக்கிய பொருளாகக் கொண்டு எழுத வருவது வேதனை யளிக்கிறது. ஒருவேளை, அவர்கள் புழங்கும் இடத்தின் தன்மை அத்தகையதோ?

    ReplyDelete
  20. எஸ்கேப். ஆனால் மேலே ஒருவரை பிடித்து தள்ளி விட்டுவிட்டீர்கள். வாங்கி படிக்க தூண்டுகின்றது என்று எழுதிவைத்திருக்கின்றார். மோசமாக உள்ளது என்றால், எவ்வளவு மோசம் என்று ஆராயத்தூண்டும் மனங்களை கிளறி விட்டு விட்டீர்கள். ஓசியில் வாங்கி ஆராய்ந்தால் சரி.

    ReplyDelete
  21. உங்களுடைய இந்த வித்தியாசமான விமர்சனத்துக்கு முதலில் பாராட்டுக்கள்.

    ஒரு வாசகனாக உங்களுக்கே இவ்வளவு பிழைகள் தெரியும்போது, அதை எழுதியவருக்கு தெரிந்திருக்க் வேண்டும். ஒரு வேளை நீங்கள் சொல்வது போல் அவருக்கே பொறுமை இருந்திருக்காது போல. சரி, அவருக்கு தான், பொறுமை இல்லை, இந்த புத்தகத்தை வெளியிட்டவர்களுக்குமா, முழுதாக படிப்பதற்கு பொறுமை இல்லை.

    இப்படி உங்களுடைய பொன்னான நேரத்தை செலவழித்து, இந்த புத்தகத்தை படித்ததற்கும், அதனை விமர்சனமாக எழுதியதற்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. மிக சிறந்த புத்தக விமர்சனம்... அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விட்டீர்கள்... உங்களைப் போலவே முகப்புத்த்கத்தில இந்த புத்தகத்தையும் அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் புத்த்கத்தையும் வைத்து நடந்த சண்டைகளை நானும் பார்த்தேன்... வாங்க வேண்டுமென்ற எண்ணமும் இருந்தது. ஆனால் கதையின் "content" குறித்த தகவல்கள் முன்னமே லேசாக கசிந்ததால் அந்த எண்ணத்தை கை விட்டேன். இப்பொழுது உங்கள் பதிவைப் படித்ததும் வாங்காமல் விட்டது நல்லதென்று தோன்றுகிறது. பின் நவீனத்துவத்தின் தவறான புரிதலினால் இது போன்ற புத்தகங்கள் நிறைய வருகின்றன, வாசிக்க நல்ல புத்தகங்கள் எத்தனையோ காத்துக் கொண்டிருக்க இது போன்ற புத்தகங்கள் நம் நேரத்தை கொள்ளை இட்டு செல்வதை என்னவென்று சொல்ல...

    ReplyDelete
  23. ரொம்பப் புலம்பியிருக்கீங்க.

    அவரு எழுதின புத்தகத்தை விமரிசனம் செஞ்சிருக்கீங்களா இல்லை எப்படி எழுதணும் என்கிற உங்க கருத்தை டமாரம் அடிச்சிருக்கீங்களா..? புத்தக விமரிசனம் போலவே இல்லையே? ஒரு வரி விடாமல் படிச்சு முடிச்சதும் இந்த விமரிசனத்தை ஏன் படிச்சோமுனு தோணுதே?

    அவரு குழப்புறாருனு சொல்றீங்க.. நீங்க என்ன செஞ்சிருக்கீங்க..ஹிஹி.. எல்லாம் தண்டம்னு எழுதிட்டு அற்புதமாக பின்னப்பட்டதுனும் சொல்லியிருக்கீங்க.

    வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது அல்லது இன்ன விதத்தில் உபயோகிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இயல்பிலே மூச்சுக்கு மூச்சு ஓத்தா போட்டுப் பேசும் மக்கள் அதை எழுதினால் மட்டும் ஆபாசக் கொடி பிடிப்பது ஆச்சரியம். என்னவோ போங்க. அடுத்த விமரிசனம் புத்தகத்தைப் பற்றியதாக இருக்கட்டும்.



    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அப்பா சார், உங்க கருத்தைதான் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன்... முதலில் அதற்கு நன்றி...

      இதனை தயவுசெய்து புத்தக விமர்சனமாக எடுத்துகொள்ள வேண்டாம்.. நிச்சயமாக புலம்பல்தான், எதற்கான புலம்பல் என்பதையும் மேற்கூறிய ஒட்டுமொத்த புலம்பல்களில் கூறிவிட்டேன் :-)

      //இல்லை எப்படி எழுதணும் என்கிற உங்க கருத்தை டமாரம் அடிச்சிருக்கீங்களா..?// இன்னும் அவ்ளோ பெரிய ஆளா மாறலை சார், ஆனா எப்படி எழுதகூடாதுன்னு டமாரம் அடிச்சதா வச்சிக்கலாம்.. காரணம் புத்தகம் மற்றும் அது சார்ந்த டமாரங்கள்...

      //ஹிஹி.. எல்லாம் தண்டம்னு எழுதிட்டு அற்புதமாக பின்னப்பட்டதுனும் சொல்லியிருக்கீங்க.// கதை அற்புதமாக பின்னப்பட்டதுன்னு மட்டும் தான் சொல்லியிருக்கேன்... ஒட்டுமொத்த நாவலையும் அல்ல..

      //வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது அல்லது இன்ன விதத்தில் உபயோகிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இயல்பிலே மூச்சுக்கு மூச்சு ஓத்தா போட்டுப் பேசும் மக்கள் அதை எழுதினால் மட்டும் ஆபாசக் கொடி பிடிப்பது ஆச்சரியம். // குறிப்பிட்ட அந்த இடத்தில் அடைப்புக்குறிக்குள் எனக்கு மட்டும்ன்னு சொல்லிட்டேனே அப்பா சார்.. முன்னூறு பக்கங்களில் இருநூறு பக்கங்கள் முழுக்க ஆபாசம் மட்டுமே இருந்தால் என் ரசிப்புத்திறன் மேல் நானே சந்தேகப்பட வேண்டியது தான்.. எழுத்துகளில் ஆபாசம் ரசிக்கும்படியாக இருக்க வேண்டும், காமம் தவிர்த்த ஒரு உணர்வையும் வெளிபடுத்துவதாக இருக்க வேண்டும். வரம்பு மீறும்பொழுது கதையில் இருந்து நழுவி கதை காமம் என்ற பாதையில் பயணித்தால், அப்படியொரு கதைஎழுத ஒரு தேர்ந்த கதைசொல்லி தான் வேண்டுமென்று அவசியமில்லை, யாராலும் அப்படியொரு கதையை (சுவாரசியமாகவே) எழுத முடியும்...

      //என்னவோ போங்க. அடுத்த விமரிசனம் புத்தகத்தைப் பற்றியதாக இருக்கட்டும்.// நிச்சயமா சார்... :-)

      Delete
    2. வரம்பு யார் வைக்கறாங்க? எழுத்துக்கு ஏது வரம்பு? இன்ன விதமான எழுத்து என்றில்லை, இன்னவிதமான வாசகர் எனறு உண்டு. (oscar wilde சொன்னதைப் புரட்டிப் போட்டது.)

      ஆபாசம்... மகாபாரதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

      Delete
    3. வரம்பு நமக்கு நாமே வைத்துகொள்வது தான்.. யாரையும் யாருடைய எழுத்துச் சுதந்திரத்தையும் தடுக்கவே முடியாது... அதையும் மேற்கூறிய பதிவில் கூறிவிட்டேன்... ஆனால் இன்னவிதமான வாசகர் எனறு உண்டு என்று கூறியதால் அவ்விதத்தில் ஒரு வாசகனாக எனது பார்வையை பதிந்துள்ளேன்...

      //ஆபாசம்... மகாபாரதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?// உங்கள் அளவிற்கு பரந்த வாசிப்பிற்கு என்னை உட்படுத்தவில்லை என்பதால் ஐ ஆம் பாசிடிவ்லி சரண்டர் அப்பா சார் :-)

      Delete
    4. என்ன இப்படி சொல்லிட்டீங்க.. வம்படிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா விடலாங்களா?

      Delete
  24. நல்ல கடிதம் சீனு... உங்கள் வாசிப்பில் கிடைத்த அனுபவங்களை அப்படியே கொட்டி விட்டீர்கள்.....

    இந்தப் புத்தகம் பற்றி இப்போது தான் கேள்விப் படுகிறேன்.....

    ReplyDelete
  25. பெண்களை பற்றி வக்கிரமாக எழுதினால் ஆண் ஆதிக்க உலகில் விற்க தானே செய்யும் .ஒன்றும் சொல்வதற்கு இல்லை ,பெண்ணை சிறுமை படுத்தும் புத்தகத்தை எப்படி ஒத்துகொள்ள முடியும் .எழுதுபவன் ஆண் ஆக இருப்பதால் என்ன வேண்டும் என்றாலும் எழுதலாம் என்பதே இந்த கேடு கெட்ட சமூகத்தின் மனநிலை ,இவர் எல்லாம் எழுதாமல் இருந்தால் சரி என்பதே என் விருப்பம்

    ReplyDelete
  26. நல்லதொரு விமர்சணம்

    பாலகுமாரனுக்கு அடுத்துன்னு போட்டவுடன் நானும் எதிர்ப்பார்ப்புடன் உங்கள் விமரசணத்தை தொடர்ந்தேன், முடிவிலே "பச்" :(

    உண்மையில் அந்த ஆசிரியர் இக்கடிதத்தை படித்து கருத்தில் கொண்டால், ஒரு வாசகன் என்ன எதிர்ப்பார்க்கிறான் என்பதை உணரக்கூடும், நமக்கும் நல்லொதொரு எழுத்து கிடைக்கூடும்.

    இப்படிபட்ட "நாவலை" வாங்கி சென்ற அந்த ஸ்கூல் பையனின் நிலையை யோசித்தால் மிகவும் கவலைக்கிடமாய் இருக்கின்றது, அவரும் படித்து நிச்சியம் அவருடைய வட்டத்தில் பகிர்ந்திருப்பார், அவருடைய வயது இவ்வெழுத்தை எங்கு கொண்டு சேர்க்குமோ :(

    ReplyDelete
    Replies
    1. ஸ்கூல்பையனை ஸ்கூல் பையனாக நினைத்துவிட்டேன்

      Delete
  27. ராஜீவ் காந்தி சாலையா ? ... விவேகானந்தர் சாலை , விவேகானந்தர் குறுக்குதெரு, துபாய் ... கேள்விபட்டிருக்கிறேன்.. ஆனால் ராஜீவ்காந்திசாலை இப்போதான் கேள்விபடுகிறேன் ... புதிய புத்தகம் பற்றிய அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete

இது... உங்க ஏரியா!